sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிக்கு அடையாள எண்; வேளாண் நல திட்டங்கள் எளிதில் பெற வாய்ப்பு: பிரத்யேக புதிய செயலி விரைவில் அறிமுகம்

/

விவசாயிக்கு அடையாள எண்; வேளாண் நல திட்டங்கள் எளிதில் பெற வாய்ப்பு: பிரத்யேக புதிய செயலி விரைவில் அறிமுகம்

விவசாயிக்கு அடையாள எண்; வேளாண் நல திட்டங்கள் எளிதில் பெற வாய்ப்பு: பிரத்யேக புதிய செயலி விரைவில் அறிமுகம்

விவசாயிக்கு அடையாள எண்; வேளாண் நல திட்டங்கள் எளிதில் பெற வாய்ப்பு: பிரத்யேக புதிய செயலி விரைவில் அறிமுகம்


ADDED : ஜன 02, 2025 10:32 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: விவசாயிகளுக்கான பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தவும், அவர்களை ஒருங்கிணைக்கவும், விவசாயிகளுக்கான அடையாள எண் வழங்கும் முறையை வேளாண்துறை விரைவில் அறிமுகப்படுத்துகிறது.

தற்போது, இந்தியா முழுவதும் தனிநபரின் அடையாள அட்டையாக ஆதார் எண் விளங்குகிறது. இதே போல விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு வேளாண் நல திட்டங்களை, விவசாயிகள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் எளிதில் பெற முடியும்.

புள்ளி விவரங்கள்


விவசாய தொழிலை மீட்டெடுக்க, மத்திய, மாநில அரசுகள் பயிர் காப்பீடு, கடன் திட்டம், உரம், பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடுபொருள்கள் வாங்க மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இவைகளால், விவசாயிகளுக்கு உண்மையிலேயே பயன் விளைந்திருக்கிறதா என்பது குறித்தான, நம்பகமான புள்ளி விபரங்கள் இல்லை. குறிப்பிட்ட விவசாயிக்கு அடையாள எண் வழங்கி பதிவு செய்யப்படுவதால், அரசு மானியங்களை குறிப்பிட்ட விவசாயி எப்போது பெற்றார், அதனுடைய பயன் என்ன, பிற திட்டங்களால் அவருக்கு நன்மை ஏற்பட்டதா, அதனுடைய விளைவுகள் என்ன என்பது குறித்து துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள விவசாயி பாதுகாப்பு அட்டையில் காப்பீடு உள்ளிட்ட ஒரு சில விபரங்கள் மட்டுமே உள்ளன. அவற்றால் அனைத்து வகை புள்ளி விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியாது. தற்போது, 10 இலக்க அடையாள எண் வழங்கப்படுவதால், விவசாயி வைத்திருக்கக்கூடிய நிலம், அதில் அவர் பயிர் செய்த விபரங்கள், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெற்ற மானியங்கள், கடன், கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் கூறுகையில்,' இத்திட்டம் தற்போது உ.பி., மத்திய பிரதேசம் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்த பயிற்சி தமிழக வேளாண் துறையினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

புதிய செயலி


குறிப்பிட்ட விவசாயி தன்னுடைய நிலத்தை விற்றாலும், அதை பிறர் வாங்கினாலும், இந்த குறிப்பிட்ட அடையாள எண்ணை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதனால் பட்டா மாறுதல் வேண்டி தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய அடையாள எண்ணுடன், வேளாண் துறை, வருவாய்த்துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த அடையாள அட்டையுடன் இணைக்கப்படுகின்றன.

இந்த அடையாள எண்ணை கொண்டு, குறிப்பிட்ட விவசாயிக்கு எங்கெங்கு விவசாய நிலங்கள் உள்ளன. அதன் அளவு, பயிர் விபரம் உள்ளிட்டவைகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.

இதனால் ஒரு விவசாயினுடைய நிலத்தை மோசடியாக அவருக்கு தெரியாமல், பிறருக்கு விற்பனை செய்ய முடியாது. இத்திட்டத்தை செயல்படுத்திய பிறகு, விவசாயி பிற அரசு அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது.

இத்திட்டத்தை செயல்படுத்த முதலில் விவசாயிகளின் முழு ஒத்துழைப்பு வேண்டும். ஆதார் எண், மொபைல் எண், ஓ.டி.பி.,பயோமெட்ரிக் உள்ளிட்டவைகளின் உதவியோடு மட்டுமே அடையாள எண்ணை உருவாக்க முடியும்.

இம்மாதம், 4ம் தேதி முதல் இத்திட்டத்திற்கான மொபைல் செயலி தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படும் என, திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கிராமங்கள் தோறும் சென்று, ஓரிடத்தில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து, அடையாள எண் உருவாக்கப்படும்.

பின்னர் பங்கேற்காத விவசாயிகளை நேரடியாக அவர்களின் இருப்பிடத்தில் சென்று, அடையாள எண் உருவாக்கி தரப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us