/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு
ADDED : செப் 22, 2024 11:56 PM
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட இரண்டு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை விட இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 40 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதேபோல, ஒரு டன் இளநீரின் விலை, 15,750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொப்பரையின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அனைத்து பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது, நீடிக்கும் பட்சத்தில் வரும் நாட்களில், இளநீரின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. எனவே, எக்காரணத்தைக் கொண்டும் இளநீரின் விலையை குறைத்து விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.