sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஜனாதிபதி விருது பெற்ற ஊராட்சியில் அள்ளப்படாத குப்பையால் நோய்

/

 ஜனாதிபதி விருது பெற்ற ஊராட்சியில் அள்ளப்படாத குப்பையால் நோய்

 ஜனாதிபதி விருது பெற்ற ஊராட்சியில் அள்ளப்படாத குப்பையால் நோய்

 ஜனாதிபதி விருது பெற்ற ஊராட்சியில் அள்ளப்படாத குப்பையால் நோய்


ADDED : டிச 10, 2025 08:18 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்: கீரணத்தம் ஊராட்சி யில் மலை போல் குவிந்த, குப்பையால் மக்கள் தவிக்கின்றனர்.

குரும்பபாளையத்தை அடுத்த காப்பி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து, கீரணத்தம் செல்லும் வழியில் பண்ணாரி அம்மன் நகர் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த வழித்தடத்தில் சாலையை ஒட்டி, லோடு கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது.

பண்ணாரி அம்மன் நகர் மக்கள் கூறுகையில், 'தனியார் நிறுவனத்தினர், ஊராட்சி ஊழியர்கள் என பலரும் இங்கு குப்பை கொட்டுகின்றனர். இந்த குப்பையை நாய்கள் கிளறுகின்றன. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்தப் பாதையில் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து கீரணத்தம் ஊராட்சி அலுவலகத்திலும், எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

கீரணத்தம், கடந்த ஆண்டு சிறந்த ஊராட்சி என, ஜனாதிபதி விருது பெற்றுள்ளது. ஆனால் குப்பையை அகற்றாமல் மக்களை நோய் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது, ஊராட்சி நிர்வாகம்' என்றனர்.






      Dinamalar
      Follow us