/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரவுண்டானா திட்டம் செயல்படுத்துங்க! வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை
/
ரவுண்டானா திட்டம் செயல்படுத்துங்க! வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை
ரவுண்டானா திட்டம் செயல்படுத்துங்க! வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை
ரவுண்டானா திட்டம் செயல்படுத்துங்க! வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை
ADDED : மார் 04, 2026 06:16 AM
உடுமலை: பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, ரவுண்டானா கட்டும் திட்டம் செயல்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக மாறி வருகிறது. முக்கிய ரோடுகளின் இருபுறங்களிலும் அமைந்துள்ள கடைகளுக்கு போதியளவு 'பார்க்கிங்' வசதி இல்லை. எனவே, தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகள் குறிப்பிட்ட அளவு, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக, மாற்றப்படுகிறது.
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும், முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. உதாரணமாக, நகரப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பட்டது.நகர எல்லையில் அமைந்துள்ள கொல்லம்பட்டரை பகுதியிலிருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர்மீடியனும் அமைக் கப்பட்டது. மேலும், அப்போது, திருப்பூர், தாராபுரம் ரோடு சந்திப்பிலும், பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில், ரவுண்டானா அமைப்பதற்கான திட்ட வரைவு அனைத்து துறை ஆலோசனைகள் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டது. இத்திட்டமும் செயல்படுத்த வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

