/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருத்தி சாகுபடி திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது.
/
பருத்தி சாகுபடி திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது.
பருத்தி சாகுபடி திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது.
பருத்தி சாகுபடி திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது.
ADDED : செப் 09, 2024 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: வேளாண் துறையில், நடப்பாண்டில், 'பலன் தரும் பருத்தி சாகுபடி திட்டம்' செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், உயிர் உரங்கள், பருத்தி நுண்ணுாட்டச் சத்து மற்றும் காய் புழு கட்டுப்படுத்த உயிரியல் காரணிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள், அன்னுார் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் கணேசபுரத்தில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.