/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி வரத்து அதிகரிப்பு; விலை உயர்வால் மகிழ்ச்சி
/
காய்கறி வரத்து அதிகரிப்பு; விலை உயர்வால் மகிழ்ச்சி
காய்கறி வரத்து அதிகரிப்பு; விலை உயர்வால் மகிழ்ச்சி
காய்கறி வரத்து அதிகரிப்பு; விலை உயர்வால் மகிழ்ச்சி
ADDED : ஆக 25, 2025 09:18 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்த நிலையில், விலையும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி (15 கிலோ பெட்டி) --- 650, தேங்காய் (ஒன்று) --- 40, கத்தரிக்காய் கிலோ - 60, முருங்கைக்காய் --- 40, வெண்டைக்காய் --- 55, முள்ளங்கி --- 25 , பூசணிக்காய் --- 20, அரசாணிக்காய் --- 20, பாகற்காய் --- 48, புடலை --- 30, சுரைக்காய் --- 25, பீர்க்கங்காய் --- 50, பீட்ரூட் --- 15, வெள்ளரிக்காய் --- 15, அவரைக்காய் --- 60, பச்சை மிளகாய் --- 60 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) --- 200, தேங்காய் ஒன்று --- 3, கத்தரிக்காய் கிலோ - 17, முருங்கைக்காய் -- 15, வெண்டைக்காய் --- 10, பூசணிக்காய் --- 5, பாகற்காய் --- 3, பீர்க்கங்காய் --- 2, அவரைக்காய் --- 30 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வெள்ளரிக்காய் -- 10 மற்றும் பச்சை மிளகாய் --- 12 ரூபாய் விலை குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை விட இந்த வாரம், காய்கள் வரத்து ஒவ்வொன்றிலும், 300 கிலோ வரை வரத்து அதிகமாக இருந்தது. அதே போன்று விலையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,' என்றனர்.