/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
/
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
ADDED : மார் 13, 2024 10:39 PM
உடுமலை- உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள், மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டுக்கு பல்வேறு நகரங்களுக்கு செல்லும், அரசு மற்றும் தனியார் புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் பல்வேறு பணிகளுக்காக, உடுமலை பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர்.
இதில், திருமூர்த்திமலை, அமராவதிநகர், தேவனுார்புதுார் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், இந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், மாணவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

