/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளை நிலங்களில் எண்ணெய் குழாய் சாலை ஓரமாக பதிக்க வலியுறுத்தல்
/
விளை நிலங்களில் எண்ணெய் குழாய் சாலை ஓரமாக பதிக்க வலியுறுத்தல்
விளை நிலங்களில் எண்ணெய் குழாய் சாலை ஓரமாக பதிக்க வலியுறுத்தல்
விளை நிலங்களில் எண்ணெய் குழாய் சாலை ஓரமாக பதிக்க வலியுறுத்தல்
ADDED : மே 23, 2025 06:41 AM
சூலுார் : 'விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்காமல், சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும்' என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரத் பெட்ரோலியத்தின் ஐ.டி.பி.எல்., திட்டத்தில், கோவை மாவட்டம் இருகூரில் இருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை, 320 கி.மீ.,க்கு, குழாய் வழியாக பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், இருகூரில் இருந்து, திருப்பூர் மாவட்டம் முத்துார் வரையுள்ள, 70 கி.மீ.,க்கு விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணி நடந்தது.
இதற்கு, இரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராடி வருகின்றனர். இதனால், பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குழுவின் கோவை மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள், கணேசன், செந்தில்குமார், ரவிக்குமார், மயில்சாமி உள்ளிட்டோர் ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஓராண்டாக விவசாய நிலங்களில் குழாய்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், நாங்கள் பயிரிட முடியாத நிலை உள்ளது. விவசாயம் செய்ய இடையூறாக உள்ள குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை ஓரமாக குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி, ஆர்.டி.ஓ., விடம் மனு அளித்துள்ளோம்' என்றனர்.