sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

/

கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு


ADDED : ஜூன் 05, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; திருப்பூர் மாவட்டம், உடுமலை, காந்தி நகர் 2வது காலனியை சேர்ந்தவர் ஆனந்தன்,67; இவர், கோவை, ஆர்.எஸ்.புரத்திலுள்ள, மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.

இந்நிலையில், அவரது சகோதரிக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதால், தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான சிகிச்சை கட்டணம் 60,000 ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். பணம் வழங்க காலதாமதம் செய்தனர்.

இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடுசெய்துள்ளதால், சிகிச்சை கட்டணம், 60,000 ரூபாய் வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us