sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குத்தகை அடிப்படையில் முதியோர் இல்லம் அறிமுகம்

/

 குத்தகை அடிப்படையில் முதியோர் இல்லம் அறிமுகம்

 குத்தகை அடிப்படையில் முதியோர் இல்லம் அறிமுகம்

 குத்தகை அடிப்படையில் முதியோர் இல்லம் அறிமுகம்


ADDED : டிச 23, 2025 05:09 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: முதுமையில் மகிழ்வாக வசிக்க, குத்தகை அடிப்படையில் 'அத்வயா' எனும் பெயரில் வீடுகளை, நிவாசன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் துவக்கியுள்ளது.

நிறுவனத்தின் இயக்குனர்கள் சீனிவாசன், வித்யா, அஸ்வின் துவாரகேஷ் கூறியதாவது:

முதுமையில் மகிழ்வாக வாழ வசதியாக, முதியோருக்கென 52 வீடுகளை அடுக்குமாடி குடியிருப்பாகவும், 18 தனி வீடுகளாகவும் அமைத்துள்ளோம்.

இந்த வீடுகளில் முதியவர்கள் தனியாகவோ, இருவராகவோ வசிக்க முடியும். கிச்சன், பாத்ரூம், டிவி, நாற்காலிகள், டீபாய், படுக்கையறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. முதியோருக்கென திட்டமிடப்பட்ட சைவ உணவு வழங்குகிறோம்.

இந்த வீடுகளில் ஆறு மாதம் முதல் ஆண்டு கணக்குகளில், குத்தகை அடிப்படையில் குடியிருக்கலாம். குறைந்தபட்சம் 35 லட்சம் ரூபாய் குத்தகை அடிப்படையிலும், மாதாந்திர கட்டணமாக 35 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உடல், மன நலம் பெற யோகா, தியானம் பயிற்சிகள், பொழுதுபோக்கு அரங்கு, புத்தகங்கள், விளையாட்டுகள், நடைபாதை பூங்கா வசதிகள் உள்ளன.

மருத்துவ உதவிக்கு, பி.எஸ்.ஜி., மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறோம். அவசர உதவிக்கு செவிலியர் ஒருவர் பணியில் இருப்பார். குறைந்தபட்சம் 55 வயதுக்கு மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us