sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி. அமைப்பு செயல்முறை விளக்க கூட்டத்துக்கு அழைப்பு

/

சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி. அமைப்பு செயல்முறை விளக்க கூட்டத்துக்கு அழைப்பு

சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி. அமைப்பு செயல்முறை விளக்க கூட்டத்துக்கு அழைப்பு

சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி. அமைப்பு செயல்முறை விளக்க கூட்டத்துக்கு அழைப்பு


ADDED : ஆக 08, 2025 09:21 PM

Google News

ADDED : ஆக 08, 2025 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி., அமைப்பது குறித்த வரும், 18ம் தேதி நடக்கும் செயல்முறை விளக்க கூட்டத்தில் பங்கேற்க, அப்பகுதி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சின்னவேடம்பட்டியில் தினமும், 9.95 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (எஸ்.டி.பி.,) கட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கழிவுநீரை சுத்திகரித்து சின்னவேடம்பட்டி ஏரியில் விடுவதற்கு ஏற்கனவே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த, 1ம் தேதி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், இதுதொடர்பான செயல்முறை விளக்க கூட்டத்துக்கு மாநகராட்சி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

சின்னவேடம்பட்டி பகுதி மக்கள், விவசாயிகள் முறையான அறிவிப்பு வழங்கவில்லை என, எதிர்ப்பு தெரிவித்தால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும், 18ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் நடக்கும், இதுதொடர்பான செயல்முறை விளக்க கூட்டத்தில், சின்னவேடம்பட்டி பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்று தங்களுடைய சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளுமாறு, மாநகராட்சி நிர்வாகமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் அழைப்புவிடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us