/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு
/
சிறப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு
ADDED : செப் 15, 2025 10:39 PM
அன்னுார்; தமிழக அரசு சார்பில், கடந்த ஜூலை 15ம் தேதி முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது.
அன்னுார் தாலுகாவில், அன்னுார் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு வருகிற 18ம் தேதி முகாம் நடைபெறுகிறது. அன்னுார் தாச பளஞ்சிகா மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது. முகாமில் பேரூராட்சி, குடிநீர் வழங்கல் துறை, வருவாய்த்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
'மகளிர் உரிமைத் தொகை, புதிய ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், நில அளவை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம்,' என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.