sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரேஸ்கோர்ஸ் நடக்குமிடமா... வாகனம் நிறுத்துமிடமா? மக்கள் வசதிக்காக ஒழுங்குப்படுத்தப்படுமா

/

 ரேஸ்கோர்ஸ் நடக்குமிடமா... வாகனம் நிறுத்துமிடமா? மக்கள் வசதிக்காக ஒழுங்குப்படுத்தப்படுமா

 ரேஸ்கோர்ஸ் நடக்குமிடமா... வாகனம் நிறுத்துமிடமா? மக்கள் வசதிக்காக ஒழுங்குப்படுத்தப்படுமா

 ரேஸ்கோர்ஸ் நடக்குமிடமா... வாகனம் நிறுத்துமிடமா? மக்கள் வசதிக்காக ஒழுங்குப்படுத்தப்படுமா


ADDED : டிச 23, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடைப்பயிற்சிக்கு இடையூறு ரேஸ்கோர்ஸ் நடைபாதையோரம் சிலர் வாகனங்கள் நிறுத்துவதால், நடைப்பயிற்சி மேற்கொள்ள இடையூறாக உள்ளது. காலை முதல் மாலை வரை, மணிக்கணக்கில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர். நடைபாதையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

- ராஜா: புதர்மண்டிய பூங்கா வெள்ளக்கிணறு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சிறுவர் பூங்கா பராமரிப்பின்றியுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் எல்லாம் துருப்பிடித்து பழுதடைந்த நிலையில் உள்ளது.

- கார்த்திக்: துரத்தும் நாய்கள் சின்னவேடம்பட்டி, இட்டேரி வீதி, லட்சுமி நகரில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்கின்றன. முதியவர்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.

- மாதேஸ்வரன்: தடுக்கி விழுகிறோம் அவிநாசி ரோடு, அண்ணா சிலை அருகே, 83வது வார்டு, நடைபாதை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. நடைபாதை முழுவதும் பெரிய, பெரிய பள்ளங்களாக உள்ளன. நடந்து செல்வோர் தடுக்கி விழுகின்றனர்.

- பாலகிருஷ்ணன்: அடிக்கடி விபத்து ஒண்டிப்புதுார், சூர்யா நகர் ரயில்வே கிராசிங் செல்லும் ரோடு சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

- நாராயணன்: கடும் துர்நாற்றம் போத்தனுார், தாயம்மாள் லே - அவுட், உழவர் சந்தை கேட்டின் எதிர்புறம் உள்ள சாக்கடையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்.

- பழனிச்சாமி: பெரிய பள்ளங்கள் காளப்பட்டி, அசோக் நகர், சேரன் அவென்யூ, நாராயணா லே-அவுட், பேஸ் - 4 பகுதியில் சாலையின் பல இடங்களில் தார் பெயர்ந்து பெரிய, பெரிய பள்ளங்களாக உள்ளது. அடிக்கடி விபத்துகள் நடப்பதால், பழுதான சாலையை விரைந்து சீர் செய்ய வேண்டும்.

- நாராயணா: ஒரு வருடமாக கசியும் நீர் சிட்கோ, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்துவருகிறது. கடந்த ஒரு வருடமாக ஒவ்வொரு முறை தண்ணீர் விநியோகத்தின் போதும் கசிவு ஏற்படுகிறது. பலமுறை புகார் செய்தும் குழாய் உடைப்பு சரிசெய்யவில்லை.

- சரவணன்: சாலையில் நெருக்கடி மதுக்கரை ரோடு, பி.ஓ.பி. வங்கி காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள சிறிய சாலை குறுகியதாக உள்ளது. இதில், சாலையின் இருபுறம் பைக், கார், வேன் போன்ற வாகனங்களை மணிக்கணக்கில் நிறுத்துகின்றனர். இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்துசெல்கின்றனர்.

- நவீன்: இடிந்த சாக்கடை பீளமேடு, காக்கவல்லார் வீதியில் சாலையோரம் சாக்கடை கால்வாய் இடிந்துள்ளது. சாலையோரம் வாகனங்கள் செல்லும்போது சறுக்கி விழுகின்றனர். இடிந்த சாக்கடையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

- பாலகிருஷ்ணா:






      Dinamalar
      Follow us