sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வண்ணமயமாகும் பழங்குடி மக்களின் தீபாவளி; சாத்தியப்படுத்தும் ஈஷா அறக்கட்டளை

/

வண்ணமயமாகும் பழங்குடி மக்களின் தீபாவளி; சாத்தியப்படுத்தும் ஈஷா அறக்கட்டளை

வண்ணமயமாகும் பழங்குடி மக்களின் தீபாவளி; சாத்தியப்படுத்தும் ஈஷா அறக்கட்டளை

வண்ணமயமாகும் பழங்குடி மக்களின் தீபாவளி; சாத்தியப்படுத்தும் ஈஷா அறக்கட்டளை


ADDED : அக் 10, 2025 12:32 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு த்தாடை, இனிப்பு பலகாரங்கள் மற்றும் பட்டாசு என்பதே தீபாவளி பண்டிகையின் அடையாளம். நம் குழந்தை பருவ நினைவேடுகளில் பட்டாசும், புத்தாடையும் நீங்கா இடம்பெற்று இருக்கும்.

சத்குருவின் ஈஷா அறக்கட்டளை, சுற்றியுள்ள கிராமங்களில் தீபாவளியின் கொண்டாட்ட ஒளியை பெரும் உற்சாகத்தோடு பரப்புகிறது. ஈஷாவை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட பழங்குடி குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் இருக்கும் மக்கள், தங்களின் தீபாவளி திருநாளை ஈஷாவின் உதவியோடு விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவ்வகையில், ஈஷா அறக்கட்டளை சார்பில், தீபாவளி பண்டிகையையொட்டி, ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள காந்தி காலனி, நொய்யல் நகர், ராஜீவ் காலனி, இருட்டுப்பள்ளம், செம்மேடு, முட்டத்துவயல், பெருமாள்கோவில்பதி, பச்சினாம்பதி, மூங்கில்மடைகுட்டை, மடக்காடு, பட்டியார்கோவில் பதி உட்பட, 28 கிராமங்களில் இருக்கும் 2,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் இனிப்பு வழங்கி வருகின்றனர்.

இத்துடன், 500 குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு பட்டாசுகள், 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு புத்தாடை துணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்துடன், ஈஷா யோகா மையத்தில் பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாட்டம் ஒரு அழகான, வண்ணமயமான நிகழ்வாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது.பழங்குடி கிராம மக்கள், தீபாவளி நாளில், ஆதியோகி முன் திரண்டு யோகேஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி, அவர்களின் பாரம்பரிய பழங்குடி ஆடல், பாடல்களுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதுகுறித்து, தானிக்கண்டி பழங்குடி கிராம மக்கள் கூறியதாவது:தீபாவளி சமயத்தில், ஈஷாவில் இருந்து வருகிறார்கள் என்றாலே, குழந்தைகள் மிகவும் ஆனந்தமாகி விடுவர். ஒரு காலத்தில் பண்டிகை காலங்களில் புத்தாடை, இனிப்புகள் எல்லாம் இல்லாத சூழல் இருந்தது. இப்போது ஈஷாவில் இருந்து எங்களின் வீடு தேடி வந்து அனைத்தும் தருகின்றனர். எங்களின் குழந்தைகளோடு பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கல்வி முதல் மருத்துவம் வரை பல உதவிகளை ஈஷா எங்களுக்கு செய்கின்றது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us