/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது அவசியம்: மத்திய இணையமைச்சர் வலியுறுத்தல்
/
யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது அவசியம்: மத்திய இணையமைச்சர் வலியுறுத்தல்
யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது அவசியம்: மத்திய இணையமைச்சர் வலியுறுத்தல்
யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது அவசியம்: மத்திய இணையமைச்சர் வலியுறுத்தல்
ADDED : ஆக 13, 2025 01:18 AM

கோவை: மத்திய மற்றும் தமிழக வனத்துறை அமைச்சகம் சார்பில், யானைகள் தின விழா, கோவை அவிநாசி சாலையில் உள்ள ஓட்டலில் நேற்று மாலை நடந்தது.
மத்திய வனத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தான் சிங் தலைமை வகித்து பேசியதாவது:
ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளன. யானைகளைப் பாதுகாக்க, வழித்தடங்களைப் பாதுகாப்பது அவசியம்.
யானைகள் மட்டுமல்லாது, சிங்கம், புலி, பனிச்சிறுத்தை உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் அக்கறை காட்டி வருகிறோம்.
பிரதமர் மோடி, வனம், சுற்றுச்சூழல், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் மிகத் தீவிர அக்கறை காட்டுகிறார். சிவிங்கிப் புலியை இந்தியாவுக்கு கொண்டு வந்தது, முக்கிய வரலாற்றுத் தருணம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மத்திய வனத்துறை சிறப்பு செயலர் சுஷீல் குமார் அவஸ்தி பேசுகையில், “நாட்டில் 33 யானைகள் காப்பகம் 80 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பில் பாதுகாக்கப்படுகிறது. 14 மாநிலங்களில் யானைகளுக்கு ஆபத்தான, 110 ரயில் பாதைகள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.
யானைகள் தினவிழாவை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, 'கஜ கவுரவ்' விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, தலைமை வன உயிரின பாதுகாவர் ராகேஷ் குமார் டோக்ரா உட்பட வனத்துறையினர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.