sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய் 

/

 'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய் 

 'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய் 

 'மணக்கிறது' மல்லிகை விலை! நேற்று கிலோ 2,000 ரூபாய் 


ADDED : ஜன 01, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவையில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மல்லிகை ஒரு கிலோ 2000 ரூபாய்க்கும், முல்லை 1200 ரூபாய்க்கும் விற்பனையானது.

கோவை சந்தைக்கு, ஆலாந்துறை, தொண்டாமுத்துார், சத்தியமங்கலம், காரமடை, புளியம்பட்டி, சேலம், நிலக்கோட்டை, ராமநாதபுரம், பெங்களூர், மைசூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் சராசரியாக 10 டன் பூக்கள் வரத்து இருக்கும்.

நேற்று மல்லிகை, முல்லை போன்ற பூக்கள் வரத்து பனிப்பொழிவு காரணமாக குறைந்தாலும், செவ்வந்தி போன்ற பூக்கள் வரத்து அதிகம் என்பதால், 20 டன் அளவுக்கு வரத்து இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோவை சந்தையில் நேற்று மல்லிகை கிலோ 2000 ரூபாய், முல்லை 1200 ரூபாய், ஜாதிமல்லி 1200 ரூபாய், சாமந்தி ரகத்தை பொறுத்து 20 முதல் 120 ரூபாய் வரையும் , செவ்வந்தி 200 ரூபாய்க்கும், துளசி 60 ரூபாய்க்கும், செண்டு மல்லி 60 ரூபாய்க்கும், ரோஸ் ஒரு கட்டு 50 முதல் 200 ரூபாய்க்கும் விற்பனையானது.

மலர் வியாபாரிகள் சங்க பொருளாளர் ஐயப்பன் கூறுகையில், '' புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது. பனியால் வரத்தும் குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

கார்த்திகை பிறந்ததில் இருந்தே பூ வியாபாரம் நன்கு உள்ளது.

தை மாதத்தில் பனி தொடர்ந்தால் பொங்கலுக்கு மல்லிகை விலை, 3000 வரை கூட போகலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us