sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா

/

முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா

முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா

முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா


ADDED : நவ 07, 2024 08:25 PM

Google News

ADDED : நவ 07, 2024 08:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் முருகர் கோவில்களில், கந்த சஷ்டி விழா நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பால முருகனுக்கு தனி சன்னதி உள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று முருகருக்கு சிறப்பு அபிஷேகமும், ராஜ அலங்காரமும் செய்யப்பட்டது.

விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

மேட்டுப்பாளையம் நகரில் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று காலை நடை திறந்து முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பூஜையில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சூரசம்ஹார விழா நடந்தது.

காரமடை அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த இரண்டாம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பராசக்தி அலங்காரத்தில், முருகர் சுவாமிக்கு சக்திவேல் வழங்கும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை கந்த சஷ்டி விழாயை முன்னிட்டு, மூலவர் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இன்று காலை திருக்கல்யாண உற்சவமும், மாலையில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. பின்பு ஆஞ்சநேயர் சுவாமிக்கு, அபிஷேக பூஜையும், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வனிதா, அறங்காவலர் குழு தலைவர் மோகனபிரியா, அறங்காவலர்கள் குழந்தைவேலு, சுரேஷ்குமார், சாவித்திரி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us