/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருமாரியம்மன் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
கருமாரியம்மன் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கருமாரியம்மன் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
கருமாரியம்மன் திருவிழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மார் 17, 2025 12:13 AM

வால்பாறை; வால்பாறை மளுக்கப்பாறை எஸ்டேட் முதல் பிரிவு கருமாரியம்மன் கோவிலின், 68ம் ஆண்டு திருவிழா கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில் கடந்த 14ம் தேதி இரவு, 9:00 மணிக்கு சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று முன் தினம் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் நேற்று காலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.