sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஆர்வம் காட்டாத கேரளா வியாபாரிகள் உறைபனியால் கேரட் பீன்ஸ் வரத்து சரிவு

/

 ஆர்வம் காட்டாத கேரளா வியாபாரிகள் உறைபனியால் கேரட் பீன்ஸ் வரத்து சரிவு

 ஆர்வம் காட்டாத கேரளா வியாபாரிகள் உறைபனியால் கேரட் பீன்ஸ் வரத்து சரிவு

 ஆர்வம் காட்டாத கேரளா வியாபாரிகள் உறைபனியால் கேரட் பீன்ஸ் வரத்து சரிவு


ADDED : டிச 27, 2025 05:21 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது.

இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது.

தினமும் சுமார் 3 ஆயிரம் மூட்டை கேரட்டுகள், 2 ஆயிரம் மூட்டை பீன்ஸ் வருவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.

வியாபாரி ராஜா கூறியதாவது:-

நேற்று கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை ஆனது. பீட்ரூட் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை ஆனது.

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால் காய்கறிகள் வரத்து சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. வரத்து குறைந்தபோதிலும் விலை ஏறவில்லை. டிமாண்ட் இல்லை என்பதால் விலையில் பெரிய மாறுபாடு இல்லை.

கேரளாவுக்கு சுமார் 50 சதவீதம் காய்கறிகள் இங்கிருந்து தான் செல்கிறது. அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், கேரளா மக்கள் பலரும் சுற்றுலா செல்வதால், காய்கறிகள் விற்பனை மந்தமாக நடக்கும். இதனால் கேரளா வியாபாரிகள் காய்கறிகள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.---






      Dinamalar
      Follow us