sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தடாகத்தில் கே.எம்.சி.எச். ஊரக மருத்துவ மையம் திறப்பு

/

தடாகத்தில் கே.எம்.சி.எச். ஊரக மருத்துவ மையம் திறப்பு

தடாகத்தில் கே.எம்.சி.எச். ஊரக மருத்துவ மையம் திறப்பு

தடாகத்தில் கே.எம்.சி.எச். ஊரக மருத்துவ மையம் திறப்பு


ADDED : செப் 10, 2025 10:27 PM

Google News

ADDED : செப் 10, 2025 10:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; தடாகத்தில் கே.எம்.சி.எச்., மருத்துவக் கல்லூரி சார்பில், ஊரக மருத்துவ மையம் திறப்பு விழா நடந்தது.

இம்மையத்தை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, துணைத்தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.

இப்புதிய ஊரக மையத்தில், புற நோயாளிகள் மருத்துவ ஆலோசனை பெற, 30 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தி, ஆண்டு முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

இம்மையத்தில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, ரத்தத்தில் உப்பின் அளவு, கிரியாட்டினின் அளவு, சர்க்கரை அளவு, மார்பு எக்ஸ்ரே, இ.சி.ஜி., உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக வழங்கப்படும்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு, மூன்று நாட்களுக்கான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.

டாக்டர் நல்லா பழனிசாமி கூறுகையில்,கிராமப்புற ஏழை மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி ஊரக மருத்துவ மையத்தினை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us