sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செல்வ விநாயகர் கோவில் 15ல் கும்பாபிஷேக விழா

/

செல்வ விநாயகர் கோவில் 15ல் கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோவில் 15ல் கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோவில் 15ல் கும்பாபிஷேக விழா


ADDED : டிச 09, 2024 05:21 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : பொன்னேகவுண்டன்புதூர், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 15ம் தேதி நடக்கிறது.

பொன்னேகவுண்டன்புதூரில், பச்சாபாளையம் சாலையில் செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு கோபுரம், விமானம், கருவறை ஆகியவை அமைக்கப்பட்டு, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டு, சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேக விழா, வரும் 14-ம் தேதி மாலை பிள்ளையார் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு திருவிளக்கு வழிபாடு, கோபுர விமான கலசங்கள் நிறுவுதல், 108 வகையான மூலிகைப் பொருட்களை சமர்ப்பித்தல், எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.

வரும் 15-ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 9.10 மணிக்கு, கோபுரங்கள், விமான கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, மகாபிஷேகம், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு நடக்கிறது.






      Dinamalar
      Follow us