sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்

/

திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்

திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்

திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்


ADDED : மார் 17, 2025 12:05 AM

Google News

ADDED : மார் 17, 2025 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், பக்தர்கள் பலர், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆனைமலையில் உள்ள, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா துவங்கியது.

தொடர்ந்து, தர்மராஜா, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், கண்ணபிரான் துாது, சாமி புறப்பாடு, குண்டத்துக் காட்டில் விஸ்வரூப தரிசனம், அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு, குண்டம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' கோஷமிட்டு, குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தவிர, 5 அடி முதல் 10 அடி நீளம் கொண்ட அலகு குத்தியும், பக்தர்கள் குண்டம் இறங்கி, பரவசமடைந்தனர். தொடர்ந்து, தேர் ஊர்வலமும் நடைபெற்றது.

அறங்காவலர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று தேர் நிலைநிறுத்துதுல், ஊஞ்சல் பட்டாபிேஷகம் நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us