/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
/
மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா
ADDED : பிப் 13, 2025 09:58 PM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது.
நேற்று காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதில், 54 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. அதன்பின், பூஜைகள் நடைபெற்றன. குண்டத்தில் மலர்கள் துாவப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, பக்தர்கள், குண்டத்துக்கு தேவையான விறகுகளை கொடுத்தனர். மொத்தம், 15 டன் விறகுகள் கொண்டு வரப்பட்டன.
கிராமங்களில் இருந்து மக்கள், பால் குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இன்று காலை, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விரதமிருக்கும், ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். குண்டம் திருவிழாவை காண வரும் பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. குண்டம் இறங்குவோருக்காக, நிழல் வசதிக்காக ெஷட் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்குழு மற்றும் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.