/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர் தின கிராம சபை பொதுமக்களுக்கு அழைப்பு
/
தொழிலாளர் தின கிராம சபை பொதுமக்களுக்கு அழைப்பு
ADDED : ஏப் 28, 2025 03:55 AM
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடக்கும் தொழிலாளர் தின கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க, பொதுமக்களுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொழிலாளர் தினத்தையொட்டி, கிராம ஊராட்சிகளில், வரும், மே 1ம் தேதி, கிராம சபை கூட்டம் நடக்கிறது. தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, மத்வராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், நரசீபுரம், வெள்ளிமலைபட்டிணம், தேவராயபுரம், தென்னமநல்லூர் ஆகிய, 10 ஊராட்சி மன்ற அலுவலகங்களில், மே 1ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடக்கவுள்ளது.
இதில், ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், புதிய திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட பணிகள், வரும் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும். பொதுமக்களும், தங்கள் குறைகளை நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.