/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
/
கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ADDED : டிச 24, 2024 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு ;கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்பகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் வன்னிக்குமார், 30, கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், இவருக்கும், மனைவி சித்ராவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில், சித்ரா தனது கணவருடன் சண்டையிட்டு, அம்மாவின் வீட்டுக்கு சென்றார். இதில் மனம் உடைந்த வன்னிக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.