ADDED : செப் 03, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
மாவுத்தம்பதி, செப். 4-
க.க.சாவடி அடுத்துள்ள மாவுத்தம்பதி வனப்பகுதியில் சின்னாம்பதி, புதுப்பதி, முருகன்பதி, மொடமாத்தி கிராமங்களில், விவசாயிகளுடன், மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களில் அடிக்கடி சிறுத்தைகளால் கால்நடைகள் வேட்டையாடப்படும்.
இரு நாட்களுக்கு முன் மாலை 4 மணிக்கு மொடமாத்தி கதிர்வேல் என்பவரின் தோட்டத்திற்குள் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த ஆட்டை கடித்தது. ஆட்டின் அலறல் கேட்டு, கதிர்வேல் வந்து பார்த்தபோது, ஆடு பலியாகி கிடந்தது.
நான்கு மாதம் முன், வாளையார் அய்யப்பன் தோட்டத்தில் ஆட்டை, சிறுத்தை கொன்றது. அடுத்து இச்சம்பவம் நடந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
