sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அழைக்கிறது பரளிக்காடு சூழல் சுற்றுலா அனுபவிக்க ஒரு 'டிரிப்' போகலாமா!

/

 அழைக்கிறது பரளிக்காடு சூழல் சுற்றுலா அனுபவிக்க ஒரு 'டிரிப்' போகலாமா!

 அழைக்கிறது பரளிக்காடு சூழல் சுற்றுலா அனுபவிக்க ஒரு 'டிரிப்' போகலாமா!

 அழைக்கிறது பரளிக்காடு சூழல் சுற்றுலா அனுபவிக்க ஒரு 'டிரிப்' போகலாமா!


ADDED : டிச 08, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரமடை: காரமடை அருகே செயல்பட்டு வரும் பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு, சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். பரிசல் பயணம், ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர்.

காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பரளிக்காடு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.

காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது .

பரளிக்காடு வரும் சுற்றுலா பயணிகள், https://Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புக் செய்து கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்து தான் செல்ல வேண்டும். முன்பதிவு செய்யாமல் செல்லக்கூடாது.

சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்கள் சார்பில் வழங்கப்படும் 10க்கும் மேற்பட்ட உணவு வகைகள், அத்திக்கடவு ஆற்றில் குளியல், பழங்குடியினர் நடனம் என, வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றனர்.

காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிங் 100க்கு மேல் உள்ளது. பரளிக்காடு, பூச்சமரத்தூர், பில்லூர், நீராடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டுநர்கள், 12க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்கள், இந்த சூழல் சுற்றுலாவால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us