sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதம் செலுத்தாவிடில் லைசன்ஸ் ரத்து!

/

போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதம் செலுத்தாவிடில் லைசன்ஸ் ரத்து!

போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதம் செலுத்தாவிடில் லைசன்ஸ் ரத்து!

போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதம் செலுத்தாவிடில் லைசன்ஸ் ரத்து!


ADDED : ஜன 28, 2025 11:51 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும், வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தவில்லை என்றால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தெரிவித்தார்.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகரில் அத்திபாளையம் பிரிவு, காந்திபுரம், டவுன்ஹால், காமராஜபுரம் மற்றும் ஹோப் காலேஜ் ஆகிய ஐந்து இடங்களில், ஐ.டி.எம்.எஸ்., (நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபடும் போலீசாரும், விதிமீறும் வாகனங்களை தங்களின் மொபைல் போனில் (போலீஸ் இ-ஐ) படமெடுத்து, அபராதம் விதிக்கின்றனர்.

ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை உள்ளதால், பலர் பணம் செலுத்தாமல் உள்ளனர். சலான் விநியோகிக்கப்பட்ட பிறகும், அபராதத்தை செலுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் பதிவு செய்யப்பட்ட, 3.20 லட்சம் வழக்குகளில் ரூ. 21 கோடி அபராதம் வசூலிக்காமல் நிலுவையில் உள்ளது. இந்த அபராதத்தை வசூல் செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 'அவுட்பாண்ட் டயலிங் சிஸ்டம்' என்ற போன் மூலம் நினைவூட்டப்படுகிறது.

'15 ஆயிரம் வழக்குகள் நிலுவை'

போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''மாநகர பகுதிகளில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது, வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.15 ஆயிரம் வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதை விரைவாக முடித்துத்தர கேட்டுள்ளோம். வாகன விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, அபராதம் வசூலிக்க, போக்குவரத்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதன் படி, வரும் நாட்களில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால், அவர்களின் லைசன்ஸ் ரத்து செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us