/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியவருக்கு ஆயுள் சிறை; போக்சோ வழக்கில் தீர்ப்பு
/
முதியவருக்கு ஆயுள் சிறை; போக்சோ வழக்கில் தீர்ப்பு
ADDED : செப் 30, 2025 11:02 PM
கோவை; மேட்டுப்பாளையம், அன்னுார் ரோட்டை சேர்ந்தவர் ேஷக்பாபு,67; கூலி தொழிலாளி. தனியாக வீட்டில் இருந்த 15 வயதான சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி கர்ப்பமானது தெரிய வந்ததால், பெ.நா.பாளையம் மகளிர் போலீசில் 2019, டிச., 10 ல் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, ேஷக்பாபுவை கைது செய்து சிறையிலடைத்தனர்.
அவர் மீது, கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம்சாட்டப்பட்ட ேஷக்பாபுவிற்கு சாகும் வரை ஆயுள்சிறை, 25,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.