sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'மின்சார ஆட்டோ' வாங்க மகளிருக்கு கடன் வசதி 

/

'மின்சார ஆட்டோ' வாங்க மகளிருக்கு கடன் வசதி 

'மின்சார ஆட்டோ' வாங்க மகளிருக்கு கடன் வசதி 

'மின்சார ஆட்டோ' வாங்க மகளிருக்கு கடன் வசதி 


ADDED : நவ 01, 2025 12:32 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'மின்சார ஆட்டோ' திட்டத்தில் வழங்கப்படும் மானியத்தை பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மின்சார ஆட்டோ வாங்க, கூட்டுறவு வங்கி சார்பில், தலா 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, கோவையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் 39 கிளைகளில், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

ஓட்டுநர் உரிமம், பேட்ச், குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியவராகவும், 45 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். வாகனத்தின் சாலை விலையில், 10 சதவீதம் தொகையை, கடன் வாங்குபவர் விளிம்பு தொகையாக செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும்; மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

தவிர, தமிழக அரசின் நல வாரியம் வாயிலாக உதவி தொகை பெறாத பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. வாகன விலை விபரம் அடங்கிய அறிக்கை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளை அணுகினால், கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us