/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து குறைவு; ஓணத்துக்கு பின் விலை சரிவு
/
வாழைத்தார் வரத்து குறைவு; ஓணத்துக்கு பின் விலை சரிவு
வாழைத்தார் வரத்து குறைவு; ஓணத்துக்கு பின் விலை சரிவு
வாழைத்தார் வரத்து குறைவு; ஓணத்துக்கு பின் விலை சரிவு
ADDED : செப் 19, 2024 10:07 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து குறைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், செவ்வாழை ஒரு கிலோ - 70, நேந்திரன் - 35, கதளி - 45, பூவன் - 30, ரஸ்தாளி - 40, சாம்பிராணி வகை 40 - 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை காட்டிலும் செவ்வாழை ஒரு கிலோவுக்கு, 5 - 10 ரூபாய், நேந்திரன் - 5, கதளி - 5, பூவன் - 8, ரஸ்தாளி - 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. மேலும், சாம்பிராணி வகை வாழைத்தார் விலையில் மாற்றம் இல்லை.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார் விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது, அனைத்து ரக வாழைத்தார்களின் விலையும் சரிந்துள்ளது. மேலும், வெளி மாவட்ட வரத்து இல்லை. உள்ளூர் வரத்து மட்டுமே உள்ளது,' என்றனர்.