/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதி கணபதி கோவிலில் மஹா கும்பாபிேஷகம்
/
ஆதி கணபதி கோவிலில் மஹா கும்பாபிேஷகம்
ADDED : மே 01, 2025 11:35 PM

வால்பாறை; வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் ஆதிகணபதி கோவிலில் மஹா கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி நடந்தது. இரவு 7:00 மணிக்கு முதல் கால யாக வேள்வி, கணபதி ேஹாமம், ஸ்ரீருத்ேஹாமம், பூரணாஹுதி நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு ஸ்வர்ணயந்திர, ரத்தின ஸ்தாபம், சுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது.
நேற்று, காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, மூலமந்திர ேஹாமம், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில்இருந்து பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து கோவிலை வலம் வந்தனர்.
அதனை தொடர்ந்து, காலை, 10:30 மணிக்கு விமான கலசத்துக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதணை நடந்தது. தொடர்ந்து, கணபதிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.