/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோற்று துறை நாதர் கோவிலில் 8ம் தேதி மஹா சிவராத்திரி விழா
/
சோற்று துறை நாதர் கோவிலில் 8ம் தேதி மஹா சிவராத்திரி விழா
சோற்று துறை நாதர் கோவிலில் 8ம் தேதி மஹா சிவராத்திரி விழா
சோற்று துறை நாதர் கோவிலில் 8ம் தேதி மஹா சிவராத்திரி விழா
ADDED : மார் 05, 2024 09:14 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர், சோற்று துறை நாதர் கோவிலில், வரும் 8ம் தேதி மஹா சிவராத்திரி விழா நடக்கிறது.
கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர், சோற்று துறை நாதர் கோவிலில், வரும் 8ம் தேதி மஹா சிவராத்திரியை முன்னிட்டு, காலை 10:00 முதல் 12:00 மணி வரை கலச பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு, முதல் கால வேள்வி நடக்கிறது. இரவு, 10:30 மணிக்கு, இரண்டாம் கால வேள்வியும், நள்ளிரவு, 1:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி வழிபாடும் நடக்கிறது.
வரும், 9ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது.

