/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தம்பதி மீது தாக்குதல் ஒருவருக்கு சிறை
/
தம்பதி மீது தாக்குதல் ஒருவருக்கு சிறை
ADDED : ஜன 21, 2026 05:00 AM
கோவை: வடவள்ளி நொய்யல் வீதியைச் சேர்ந்தவர் அருள்முருகன், 44; பில்டிங் கான்ட்ராக்டர். வடவள்ளி காஸ்மோ வில்லேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சபரி, 24. அருள்முருகனின் மகனும், சபரியின் அண்ணனும் நண்பர்கள். நேற்று முன்தினம், இருவரும் மது அருந்த சென்றனர். இது அருள்முருகனின் மனைவிக்கு தெரிந்தது. மதுக்கடைக்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்த மகனை சத்தமிட்டு அழைத்து வந்தார்.
இந்நிலையில் டாஸ்மாக்கில் தனது தம்பியை, அருள்முருகனின், மனைவி தாக்கியதாக, சபரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அருள் முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சபரி, அவரது நண்பர் அருண்குமார் ஆகியோர், அருள்முருகன் மற்றும் அவரது மனைவியை தாக்கினர். இருவரும் காயமடைந்தனர். வடவள்ளி போலீசார் சபரியை சிறையில் அடைத்தனர்.

