sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது

/

ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது

ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது

ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது


ADDED : டிச 18, 2024 08:24 PM

Google News

ADDED : டிச 18, 2024 08:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 38ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.

அதன்பின், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து உற்சவர் ஐயப்ப சுவாமி கோவிலை மூன்று முறை வலம் வந்து, விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதரிடம் ஆசி பெற்றார். காலை, 10:00 மணிக்கு ராஜகுரு சுப்புராஜ் குருசாமி தலைமையில் திருக்கொடியேற்றப்பட்டது. விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மண்டல பூஜை திருவிழா நேற்று காலை, 9:30 மணிக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, வானில் கருடன் மூன்று முறை கோவிலை சுற்றி வலம் வந்தது. இதை கண்ட ஐயப்ப பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டனர்.

விழாவில் நாளை (20ம் தேதி) காலை, 10:15 மணிக்கு நடுமலை ஆற்றில் ஆராட்டுவிழா நடக்கிறது. தொடர்ந்து, 108 கலசங்களுடன் பக்தர்கள் புனித தீர்த்தம் கொண்டு வந்து, ஐயப்பனுக்கு அபிேஷக பூஜை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, 1008 தீபம் ஏற்றி, ஐயப்ப சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது.

வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதான விழாவும், மாலை 3:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 22ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட் தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழா ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us