/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் சங்கம் சார்பில் மாரத்தான்
/
வக்கீல் சங்கம் சார்பில் மாரத்தான்
ADDED : பிப் 16, 2026 06:45 AM

கோவை: கோவை வக்கீல் சங்கம் சார்பில், அரசியலமைப்பு தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, இரண்டாம் ஆண்டு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பாபுலால், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் ஆகியோர் மாரத்தானை துவக்கி வைத்தனர். மாரத்தான் செஞ்சிலுவை சங்கம், ஒசூர் ரோடு, ரேஸ்கோர்ஸ் சுற்று வட்ட பகுதி, கே.ஜி. தியேட்டர் வழியாக மீண்டும் கோர்ட் வளாகத்தை அடைந்தது. நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாரத்தானில் பங்கேற்றவர்களுக்கு டீ சர்ட், தொப்பி வழங்கப்பட்டன.
மாரத்தானை நிறைவு செய்தவர்களை வரவேற்க, 'டிரம்ஸ்' அடித்து உற்சாகப்படுத்தினர். வக்கீல் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ், குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் மருது பாண்டியன் ஆகியோர் பதக்கம் வழங்கினர்.

