sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

/

மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா


ADDED : மே 06, 2025 11:06 PM

Google News

ADDED : மே 06, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: அன்னுார் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில், நேற்று கம்பம் நடப்பட்டது.

அன்னுார், மாரியம்மன் கோவில், 35ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 29ம் தேதி துவங்கியது. கடந்த 5ம் தேதி வரை, தினமும் இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. மாலையில் கம்பம் நடப்பட்டு, பூவோடு எடுக்கப்பட்டது. மாரியம்மனுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது. விழா கமிட்டி உறுப்பினர்கள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்றும், நாளையும், மாலையில் கம்பம் சுற்றி ஆடும் வைபவம் நடக்கிறது.

வரும் 9ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 11ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. வரும் 12ம் தேதி இரவு அணிக்கூடை எடுத்து வரப்படுகிறது.

வரும் 13ம் தேதி அதிகாலையில் சக்தி கரகம் எடுத்தல், அம்மன் அழைப்பு, பூவோடு எடுத்தல் நடைபெறுகிறது. காலை 10:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மாலையில், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us