sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்: ஓம் சக்தி... பராசக்தி கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

/

மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்: ஓம் சக்தி... பராசக்தி கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்: ஓம் சக்தி... பராசக்தி கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்: ஓம் சக்தி... பராசக்தி கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

1


ADDED : டிச 13, 2024 04:22 AM

Google News

ADDED : டிச 13, 2024 04:22 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில், கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலாலயம் நடந்தது. கடந்த மாதம், 14ம் தேதி மூலஸ்தானம் மற்றும் மற்ற சன்னதிகளுக்கு பாலாலயம் நடந்தது.

இதையடுத்து, கும்பாபிேஷக விழா கடந்த, 6ம் தேதி வேதபாராயணத்துடன் துவங்கியது. கடந்த, 9ம் தேதி யாக பூஜைகள் துவங்கப்பட்டன. நேற்று காலை, 7:35 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, காலை, 8:45 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்றது.

அதன்பின், மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், இரண்டாம் ஸ்தானீகம் ராஜா பட்டர் தலைமையில், சிவாச்சாரியர்கள், யாக சாலையில் இருந்து, விமான கோபுரங்களுக்கு கலசங்களை கொண்டு வந்தனர். அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில்பாலாஜி பச்சை கொடி அசைக்க, சிவாச்சாரியர்கள், காலை, 9:30 மணிக்கு மாசாணியம்மன் கோபுரத்துக்கு கலசங்களில் இருந்து புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெற்றன. பக்தர்கள், 'ஓம் சக்தி... பராசக்தி, மாசாணி தாயே' என கோஷமிட்டு வணங்கினர்.

எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, கந்தசாமி, எம்.பி., ஈஸ்வரசாமி, கோவை முன்னாள் மேயர் வேலுச்சாமி, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன்,ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் அறங்காவலர்கள், ஆதீனங் கள், முக்கிய பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

2,087 கும்பாபிேஷகங்கள்!

அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ''ஆகம விதிப்படி, 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிேஷக விழா நடைபெற்றது. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 2,087 கோவில்களுக்கு கும்பாபிேஷக விழா நடைபெற்றுள்ளது.இன்று மட்டும், ஏழு கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டுள்ளது. மலைக்கோவிலில் மருத்துவமனை, முழு நேர அன்னதான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.








      Dinamalar
      Follow us