/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனை ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கணும்!
/
மருத்துவமனை ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கணும்!
ADDED : செப் 01, 2025 07:20 PM
பொள்ளாச்சி:
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து தரப்பு பணியாளர்களும் உளவியல் ரீதியான பாதிப்பை தவிர்க்க, மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.
இங்கு, டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என, அதிகப்படியானவர்கள் பணிபுரிகின்றனர்.
மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சிலர், குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியாமல் 'ஷிப்ட்' முடிந்து வீடு திரும்புவதில்லை.
இங்கு, சக ஊழியர்களை கையாளும் பொறுப்பில் இருக்கும் அலுவலர்கள், தனக்கான மனக் குழப்பத்தை சகஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் வெளிக்காட்டுவதாக புகார் எழுகிறது.
மருத்துவ பணியாளர்கள் கூறியதாவது:
குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளை, பணி நேரத்தில், மொபைல்போன் வாயிலாக எதிர்கொள்ளும்போது, நோயாளிகளை கடிந்து கொள்கின்றனர்.
மேலும், நொடிக்கு ஒருமுறை மனநிலையை மாற்றி எடுக்கும் முடிவுகளால், சக பணியாளர்கள் செய்வதறியாது திணறுகின்றனர்.
மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பினருக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும். ஏதேனும் ஒரு வேளையில், 'யோகா' பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.