/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனவளக்கலை யோகா வகுப்பு இன்று துவக்கம்
/
மனவளக்கலை யோகா வகுப்பு இன்று துவக்கம்
ADDED : பிப் 02, 2026 05:29 AM
அன்னூர்: அன்னூரில் மனவளக்கலை யோகா வகுப்பு இன்று துவங்குகிறது.
அன்னூர் அ.மு.காலனியில் மனவளக்கலை மன்றம் செயல்படுகிறது. இங்கு வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா எனும் 12 நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.
இன்று மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. இந்த வகுப்பில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் ஆகியவை கற்பிக்கப்படும்.
இப்பயிற்சி பெறுவதன் மூலம் மன அமைதி பெற முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தெளிவு ஏற்படும்.
மேலும் விவரங்களுக்கு, 97899 88949, 94424 56862 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

