/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காது குறைபாடுகளுக்கு நவீன தீர்வு
/
காது குறைபாடுகளுக்கு நவீன தீர்வு
ADDED : பிப் 13, 2026 05:11 AM

இ ன்றைய வேகமான உலகில், கேட்கும் திறன் குறைபாடு பலரின் தினசரி வாழ்க்கையை அமைதியாக பாதிக்கிறது.ஆரம்ப நிலையில் கவனிக்கப்படாத காது குறைபாடுகள், காலப்போக்கில் பேசுதல், சமூக உறவுகள் மற்றும் மனநலத்தை கூட பாதிக்கக்கூடும்.
குளோபல் ஹியரிங் எய்ட் சென்டரில் ஆடியாலஜிஸ்ட்கள் மூலம் முழுமையான காது பரிசோதனை செய்து, வயது, வாழ்க்கை முறை மற்றும் கேட்கும் தேவையைப் பொறுத்து தனிப்பட்ட ஆலோசனை வழங்குகிறது. ஒவ்வொருவரின் தேவைக்குஏற்ப காது கருவியை வடிவமைத்து தருகின்றனர்.
நவீன காது கருவிகள் மிகச் சிறியது, எடை குறைந்தது. ரீசார்ஜ் வசதி, புளூடுத், தெளிவான மற்றும் இயற்கையான ஒலி என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. வெளிப்புற சத்தங்களை குறைத்து, தேவையான குரல் ஒலிகளை தெளிவாக கேட்க உதவுகின்றன.
2009ல் துவங்கப்பட்ட குளோபல் ஹியரிங் எய்ட் நிறுவனம், 8 நகரங்களில் 16 கிளைகளை கொண்டுள்ளது. கோவையில் 3 கிளைகள் உள்ளன.காது பரிசோதனை, சிகிச்சை, கருவி ஆலோசனை வழங்கப்படுகின்றன.
- குளோபல் ஹியரிங் எய்ட் சென்டர், ராமநாதபுரம், சித்தாபுதுார் மற்றும் ஆர்.எஸ்.புரம்.
-87530 87530

