/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழை தீவிரமில்லை: அணை நீர்மட்டம் சரிவு
/
பருவமழை தீவிரமில்லை: அணை நீர்மட்டம் சரிவு
ADDED : டிச 09, 2024 10:53 PM

வால்பாறை; வடகிழக்குப் பருவமழை தீவிரமடையாததால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
வால்பாறையில் தென்மேற்குப் பருவமழைக்கு பின், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்தும் அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்து, வெயில் நிலவுவதால், பி.ஏ.பி., அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வருவதோடு, அணைகளின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து வருகிறது.
160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 140.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 36.58 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ள நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு, 405.33 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. இதனால், நீர்மட்டம் சரிந்து வருகிறது.
இதே போல், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 112.40 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 68.12 அடியாகவும் இருந்தது. வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்த நிலையில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.