sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

கோயம்புத்தூர்

/

சாக்கடையை அடைப்பவர்களால் கொசு, துர்நாற்றம்; காளம்பாளையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம்

/

சாக்கடையை அடைப்பவர்களால் கொசு, துர்நாற்றம்; காளம்பாளையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம்

சாக்கடையை அடைப்பவர்களால் கொசு, துர்நாற்றம்; காளம்பாளையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம்

சாக்கடையை அடைப்பவர்களால் கொசு, துர்நாற்றம்; காளம்பாளையத்தில் வீட்டு உரிமையாளர்கள் அட்டூழியம்


ADDED : செப் 30, 2025 12:52 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாக்கடையை அடைக்கின்றனர்

சிறுவாணி மெயின் ரோடு, காளம்பாளையம், காந்தி காலனியில், வீட்டின் உரிமையாளர்கள் ஆங்காங்கே சாக்கடையை அடைத்து வைக்கின்றனர். இதனால், கழிவுநீர் தேங்கி கொசு மற்றும் பூச்சித்தொல்லைகள் அதிகமாக உள்ளன. குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசுகிறது.

- ரெஜி, காளம்பாளையம்.

தினமும் நடக்கும் விபத்து

கோவை மாநகராட்சி, 83வது வார்டு, பிஷப் அப்பாசாமி கல்லுாரி ரோட்டில் ஆங்காங்கே குழிகள் உள்ளன. சாலையில் நீளமாக உள்ள குழிகளால், கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தினமும் இப்பகுதியில் சிறு விபத்துகள் நடக்கின்றன.

- பாலா, 83வது வார்டு.

உடைந்த சிலாப்பால் விபத்து சொக்கம்புதுார், 77வது வார்டு, அய்யாவு பன்னடி தெருவில் பல இடங்களில், சாக்கடை சிலாப் உடைந்துள்ளது. திறந்தநிலை சாக்கடைகளில் குழந்தைகள், பெரியவர்கள் விழ வாய்ப்புள்ளது. விபத்துகள் நடக்கும் முன், சிலாப்பை சரிசெய்ய வேண்டும்.

- கார்த்திக், சொக்கம்புதுார்.

மண் சாலையால் அவதி

கலிக்கநாயக்கன்பாளையம், சி.பி.சி., கார்டன், பேஸ் - 3ல் இதுவரை தார் சாலை வசதி அமைக்கவில்லை. மழைக் காலத்தில் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். எவ்வளவு கோரிக்கை வைத்தும் தார் சாலை அமைக்கவில்லை.

- சங்கர், சி.பி.சி., கார்டன்.

தண்ணீரின்றி தவிப்பு

மாநகராட்சி, 56வது வார்டு, நேதாஜிபுரம் பகுதியில் போர் மோட்டார், கடந்த ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதமாக உப்பு தண்ணீர் விநியோகிக்கவில்லை. குடியிருப்புவாசிகள் போதிய தண்ணீரின்றி அவதிக்குள்ளாகின்றனர்.

- செல்வராஜ், நேதாஜிபுரம்.

ஆறு விளக்குகளும் பழுது

மருதமலை ரோடு, வேளாண் பல்கலை அடுத்து சீரநாயக்கன்பாளையம் வழியாக கரும்பு இனப்பெருக்க ஊரய்ச்சி நிலையம் செல்லும் பாதையில், ஒரு மாதத்திற்கு மேலாக தெருவிளக்குகள் எரியவில்லை. ஒன்று முதல் ஆறு வரையுள்ள கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை.

- விஜய், சீரநாயக்கன்பாளையம்.

இருளால் பாதுகாப்பில்லை

மாநகராட்சி, 40வது வார்டு, ஐயர் காலனி போகும் பகுதியில் உள்ள தெருவிளக்குகள், பல நாட்களாக எரிவதில்லை. இரவில் இப்பகுதியில் செல்லவே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தெருவிளக்கு பழுது குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.

- விநாயகமூர்த்தி, 40வது வார்டு.

பள்ளத்தை மூடுங்க

மருதமலை ரோடு, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகம் அருகே சாலையோரம் 10 அடிக்கு மேல் பெரிய பள்ளம் உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். நடந்து செல்வோருக்கும் இந்தப்பள்ளம் அபாயகரமானதாக உள்ளது.

- லெனின், மருதமலை ரோடு.

சாலையில் இறைச்சிக்கழிவு

சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, 14வது வார்டு, இடையர்பாளையம் செல்லும் சாலையில் தொடர்ந்து குப்பை, இறைச்சிக்கழிவு கொட்டப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. கழிவு கொட்டுவதை தடுக்க நடவடிக்கை வேண்டும்.

- பார்த்தசாரதி, சிக்கதாசம்பாளையம்.

மிரட்டும் நாய்கள்

கோவைப்புதுார், 90வது வார்டு, தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 10க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்கின்றன. வாகனங்களில் செல்வோர், சாலையில் நடந்து செல்வோரைத் துரத்தி மிரட்டுகின்றன.

- பாலாஜி, கோவைப்புதுார்.






      Dinamalar
      Follow us