ADDED : பிப் 08, 2026 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கல்வீரம்பாளையம் தண்ணீர் பந்தல் வீதியை சேர்ந்தவர் முருகாத்தாள், 68. இவருக்கு மகன், மகள் உள்ளனர். இவரது மகன் கருப்பசாமி, 43. குடிப்பழக்கம் உள்ளவர். பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். செலவுக்கு அடிக்கடி தாயார் முருகாத்தாளிடம் பணம் வாங்குவது வழக்கம்.
முருகாத்தாள் முதுமையிலும் வேலைக்கு சென்று சம்பாதித்து வந்தார். கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வேலைக்கு செல்லவில்லை.
இந்நிலையில் கருப்பசாமி மது குடிக்க பணம் கேட்டார். பணம் இல்லை என கூறிய அவரை, கட்டையால் தாக்கினார். இதில் முருகாத்தாள் படுகாயமடைந்து மயங்கினார். அருகிலிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். வடவள்ளி போலீசார் கருப்பசாமியை சிறையில் அடைத்தனர்.

