sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முடீஸ் ரோட்டை விரிவுபடுத்துங்க: வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

/

முடீஸ் ரோட்டை விரிவுபடுத்துங்க: வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

முடீஸ் ரோட்டை விரிவுபடுத்துங்க: வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

முடீஸ் ரோட்டை விரிவுபடுத்துங்க: வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை


ADDED : அக் 21, 2025 08:14 PM

Google News

ADDED : அக் 21, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: முடீஸ் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில் நகரில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது முடீஸ் பஜார். கடந்த பல ஆண்டுகளாக இந்த ரோடு சீரமைக்கப்படாமல் இருந்தது. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சித்திவிநாயகர் கோவிலிலிருந்து முடீஸ் பஜார் வரை நகராட்சி சார்பில் ரோடு போடப்பட்டது.

இந்நிலையில், முடீஸ் ரோடு குறுகலாக இருப்பதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சுற்றுலாவாகனங்கள் அதிக அளவில் இந்த ரோட்டில் செல்வதால், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

இது வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'சோலையாறு சித்திவிநாயகர் கோவிலில் இருந்து, முடீஸ் பஜார் வரை ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் விபத்துள்ளாகிறது. யானைகள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே வாகனங்கள் இடையூறு இல்லாமலும், விபத்து ஏற்படாமலும் செல்ல, முடீஸ் ரோட்டை நகராட்சி சார்பில் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us