sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அரசு பஸ்சில் தவறவிட்ட தங்க சங்கிலி: போலீசில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்

/

 அரசு பஸ்சில் தவறவிட்ட தங்க சங்கிலி: போலீசில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்

 அரசு பஸ்சில் தவறவிட்ட தங்க சங்கிலி: போலீசில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்

 அரசு பஸ்சில் தவறவிட்ட தங்க சங்கிலி: போலீசில் ஒப்படைத்த நகராட்சி ஊழியர்


ADDED : நவ 20, 2025 05:30 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: அரசு பஸ்சில் பயணியர் தவறவிட்ட தங்கச்சங்கிலியை, நகராட்சி ஊழியர் மீட்டு போலீசில் ஒப்படைத்தார்.

வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், நாள் தோறும் பழநிக்கு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன் தினம் பழநியிலிருந்து வால்பாறைக்கு பஸ் இயக்கப்பட்டது.

அப்போது அந்த பஸ்சில், நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த தமிழ்அழகன் என்பவர் குடும்பத்துடன் பயணம் செய்தார்.

வால்பாறை நகருக்கு வந்த பஸ்சை விட்டு இறங்கும் போது, குழந்தையின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வால்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதனிடையே காணாமல் போன தங்க சங்கிலியை, அதே பஸ்சில் பயணம் செய்த வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் கலீல்ரகுமான், பஸ்சிலிருந்து கிழே இறங்கும் போது, அதை கண்டார். பின்னர் வால்பாறை போலீசில் அந்த தங்க சங்கிலியை ஒப்படைத்தார்.

இதனையடுத்து, தமிழ்அழகனை போலீசார் வரவழைத்து, தவறவிட்ட தங்க சங்கிலியை நேரில் வழங்கினர்.

அதன் பின் பஸ்சில் பயணியர் தவறவிட்ட தங்க சங்கிலியை நேர்மை தவறாமல் போலீசிடம் வழங்கிய, நகராட்சி ஊழியர் கலீல்ரகுமானை, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us