sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய நுாலக வார விழா; மாணவர்கள் விழிப்புணர்வு

/

தேசிய நுாலக வார விழா; மாணவர்கள் விழிப்புணர்வு

தேசிய நுாலக வார விழா; மாணவர்கள் விழிப்புணர்வு

தேசிய நுாலக வார விழா; மாணவர்கள் விழிப்புணர்வு


ADDED : நவ 20, 2024 10:14 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை ; ஆனைமலையில் வாசிப்பின் அவசியம் குறித்து மக்களிடையே, அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆனைமலை கிளை நுாலகம் வாயிலாக, தேசிய நுாலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், ஆனைமலையில், நுாலகத்தின் பயன்பாட்டை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வாசகர் வட்டத் தலைவர் ராம்குமார், தலைமை வகித்தார். முன்னதாக, நுாலகர் மீனாகுமாரி, அனைவரையும் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி பங்கேற்றார்.

தொடர்ந்து, 'அறிவைத் தேடி நுாலகம் செல்வோம்', 'படிப்போம், படைப்போம், பதிப்போம்' என்று முழுக்கமிட்டு, பொதுமக்கள் மத்தியில் வாசிப்பின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரூராட்சி துணைத் தலைவர் ஜாபர்அலி, கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வாசகர் மாணிக்கம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us