/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேஷனல் மாடல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
நேஷனல் மாடல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நேஷனல் மாடல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
நேஷனல் மாடல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 22, 2026 05:13 AM

கோவை: நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு,பள்ளி வளாகத்தில் நடந்தது.
கல்வி தலைவர் மோகன் சந்தர் தலைமை வகித்து பேசுகையில், ''முன்னாள் மாணவர்களின் பிணைப்பைத் தொடரச் செய்யும் வகையில், இனி வரும் காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய சந்திப்புகள் நடத்தப்படும்,'' என்றார்.
முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் விக்னேஷ் ஹரி, துணைத் தலைவர் ரிஷி, செயலாளர் விஷால் ஆதித்யா, பொருளாளர் நித்யஸ்ரீ, இணைச் செயலாளர் கோபிகா விழாவை ஒருங்கிணைத்தனர். 2014 முதல் 2025 வரை படித்த, 200 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பள்ளிப்பேருந்தில் பயணம் செய்து மகிழ்ந்தனர். குழுப்புகைப்படம் எடுத்தனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் கீதா, துணை முதல்வர் லாவண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

