/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு விமானவியல் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
/
நேரு விமானவியல் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
நேரு விமானவியல் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
நேரு விமானவியல் கல்லுாரியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 17, 2025 10:58 PM

கோவை; நேரு விமானவியல் கல்லுாரியின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா, நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக, கோவை சர்வதேச விமான நிலையத்தின், ஒய்வு பெற்ற ஏர் இந்தியா லிமிடெட் மேலாளர் விஜயலட்சுமி பங்கேற்றார்.
விழாவில் கிருஷ்ணகுமார் பேசுகையில், ''தமிழ்நாட்டிலேயே விமானவியல் துறையில், 58 வருடங்களைக் கடந்து, இன்னும் பல சாதனையாளர்களை உருவாக்குவதில், நேரு கல்வி குழுமம் முதன்மை பங்களிப்பதில் பெருமை கொள்கிறது,'' என்றார்.
நேரு கல்வி குழுமத்தின் செயல் இயக்குனர் நாகராஜா, கல்லுாரியின் டீன் பாலாஜி, இளங்கலை துறைத்தலைவர் சிங்காரவடிவேலு, துறைத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர் விழாவில் பங்கேற்றனர்.