ADDED : ஆக 16, 2026 06:31 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தனியார் வாழைத்தார் ஏல மண்டியில் நேற்று நடந்த ஏலத்தில், நேந்திரன், கதளி விலை உயர்ந்து ஏலம் போனது.
3,500 வாழைத்தார்கள் ஏலத்துக்கு வந்திருந்தன; 25 வியாபாரிகள் பங்கேற்றனர்.
ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன், குறைந்த பட்சம், 20க்கும், அதிகபட்சம், 55 ரூபாய்க்கும் ஏலம் போனது. கதளி 25 – 65 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கதளி, நேந்திரன் விலை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது.
வாழைத்தார்கள் ஏலம் போனதில், பூவன் அதிகபட்சம், 600 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம் 750; தேன் வாழை 900; செவ்வாழை 950; ரோபஸ்டா அதிகபட்சம் 600; பச்சை நாடன் அதிகபட்சம், 500; மொந்தன் அதிகபட்சம் 500 ரூபாய்க்கும் ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட ஒரு தாரின் விலை, 50 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு ஏலம் போனது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்தது.
